"அன்பான வணிகன்"சமுர்த்தி சந்தை ஆரையம்பதி சமுர்த்தி வங்கியின் ஏற்பாட்டில்......

 "அன்பான வணிகன் "சமுர்த்தி சந்தை ஆரையம்பதி சமுர்த்தி வங்கியின் ஏற்பாட்டில்...... 

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சமுர்த்தி திணைக்களத்தால்  "அன்பான வணிகன் " எனும் சிந்தனையில் சமுர்த்தி சந்தை தற்போது நாடுபூராவும் நடைபெற்று வருகின்றது.

 இதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை பற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ஆரையம்பதி சமுர்த்தி வங்கியின் ஏற்பாட்டில் "அன்பான வணிகன் " சமுர்த்தி சந்தை 08.04.2021 இன்று ஆரையம்பதி சமுர்த்தி வங்கியின் முகாமையாளர் திரு.நவரஞ்சன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு மண்முனை பற்று பிரதேச செயலாளர் திருமதி.சத்தியானந்தி நமசிவாயம் அவர்கள் அதிதியாக கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார். இதன் போது இந்நிகழ்வின் பிரதம அதிதியான மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் திருமதி அ.பாக்கியராஜா அவர்களும் கலந்து கொண்டு "அன்பான வணிகன் " சந்தையை பார்வையிட்டார்.

இதன் போது சமுர்த்தி பயனாளிகளின் உற்பத்திகள் காட்சிப்படுத்தப்பட்டதுடன் விற்பனையும் இடம் பெற்றதுடன் சிறந்த முயற்சியாளர்களுக்கு சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.






















Comments