மகளிர்தின நிகழ்வில் திரியமதா அதிஸ்;ட வைப்பு சான்றிதழ் வழங்கி வைப்பு.....

 மகளிர்தின நிகழ்வில் திரியமதா அதிஸ்;ட வைப்பு சான்றிதழ் வழங்கி வைப்பு.....

  சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சமுர்த்தி வங்கியூடாக பெண்களுக்கான திரியமாதா சேமிப்புக்களை மேற் கொண்ட பயனாளிகளுக்கான திரியமாதா அதிஸ்ட வைப்புச சான்றிழ்களும் விசேட பரிசில்களும் வழங்கும் வைபவம் இன்று 08.03.2021 புளியந்தீவு சமுர்த்தி வங்கிச்சங்கத்தில் சமுர்த்தி முகாமையாளர் திரு.மணிவன்னண் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சமுர்த்தி பயனாளிகளுக்கு திரியமதா அதிஸ்;ட வைப்பு சான்றிதழ்களையும் விசேட் பரிசில்களையும் வழங்கி வைத்தார். மற்றும் இந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர்  அ.அருணன் அவர்களும் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி சிரேஸ்ட முகாமையாளர் ஜீ.பே மணோகிதராஜ் அவர்களும் மண்முனை வடக்கு பிரதேச செயலக சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் கே.பரமலிங்கம் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சமுர்த்தி பயனுகரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.






Comments