மண்முனை பற்றில் சௌபாக்கியா வாரத்தை முன்னிட்டு சமுர்த்தி பயனாளிகளுக்கு வீடுகள் கையளிப்பு ....

 மண்முனை பற்றில் சௌபாக்கியா வாரத்தை முன்னிட்டு சமுர்த்தி பயனாளிகளுக்கு  வீடுகள் கையளிப்பு ....

சௌபாக்கிய வாரத்தினை முன்னிட்டு பிரதேச செயலக மட்டத்தில் பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தி வருகின்றன. சமுர்த்தி திணைக்களத்தின் ஊடாக வீடற்றவர்களுக்கு சௌபாக்கியா வீடுகளை நிர்மானித்து கொடுக்கும் செயற்பாடு நடைபெற்று வருகின்றன. இதன் அடிப்படையில்  மண்முனை பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராமங்களில் சௌபாக்கியா வீடுகளை சமுர்த்தி பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வு 08.03.2021 அன்று நடைபெற்றது.

  இந்நிகழ்வில் மண்முனை பற்று பிரதேச செயலக  பிரதேச செயலாளர் சத்தியானந்தி நமச்சிவாயம் கலந்து கொண்டு சமுர்த்தி  பயனாளியிடம் வீட்டுகளை கையளித்தார். இந்நிகழ்வில் மண்முனை பற்று பிரதேச செயலக  சமுர்த்தி தலைமையக முகாமையாளர், மண்முனை பற்று பிரதேச செயலக  சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர், மண்முனை பற்று பிரதேச செயலக  சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி முகாமையாளர், கிராம உத்தியோகத்தர், பொருளாதார உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.






Comments