கோறளைப்பற்று மத்தியில் 200000 குடும்பங்கள் மற்றும் 25000 இளம் பெண்கள் மேம்படுத்தல் தொடர்பான கருத்தரங்கு......

கோறளைப்பற்று மத்தியில்  200000 குடும்பங்கள் மற்றும் 25000 இளம் பெண்கள் மேம்படுத்தல் தொடர்பான கருத்தரங்கு......

நாட்டில் சுபீட்சத்தை நோக்கிய வேலைத்திட்டத்தின் கீழ் 200000 குடும்பங்களை மேம்படுத்துவதற்காகவும் 25000 இளம் பெண் விற்பனையாளர்களை உருவாக்கும் வேலைத்திட்டத்திற்கான கருத்தரங்கு 23.03.2021 அன்று  கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் A.M.அலி அக்பர் அவர்கள் வளவாளராக கலந்து கொண்டு நடாத்தி வருகின்றார்.

இக்கருத்தரங்கானது கோறளைப்பற்று மத்தி  பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் கோறளைப்பற்று மத்தி உதவி பிரதேச செயலாளர் M.A.C.ரமீசா அவர்களின் தலைமையில் நடைபெற்று வருகின்றது.   இந்நிகழ்வில் கோறளைப்பற்று மத்தி சமுர்த்தி தலைமை முகாமையாளர் S.B.M. ருமைஷ் கோறளைப்பற்று மத்தி சமுர்த்தி திட்டமுகாமையாளர் A.L.M.சரீப்.சமுர்த்தி வங்கி முகாமையாளர் S. ரவிச்சந்திரன்.கிராம மட்ட பகுழு உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.






Comments