சமுர்த்தி பயனுகரி கணவர் லெபனானில் மரணம்.....

சமுர்த்தி பயனுகரி கணவர் லெபனானில் மரணம்.....

மயிலம்பாவெளி கிராமத்தின் சமுர்த்தி பயனுகரியான தேவநாதன் சுசீலாவின் கணவர் கனகசபை தேவநாதன் 25.09.2019 அன்று லெபனானில் மாரடைப்பால் காலமானார். ஒரு பிள்ளையின் தந்தையான இவர் யாழ்பாணத்தை பிறப்பிடமாக கொண்டவர் ஆவார். அன்னாரின் பூதவுடல் நேற்று 05.10.2019 கொழும்பை வந்தடைந்து தற்போது மயிலம்பாவெளியில் உள்ள அன்னாராது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது இன்று 06.10.2019 மாலை நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
 அன்னாரின் இல்லத்திற்கு மயிலம்பாவெளி இளந்தளிர் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் தலைவர் உட்பட உறுப்பினர்கள் சென்று அனுதாபத்தை தெரிவித்ததுடன் அனுதாபத்தை தெரிவிக்கும் பதாதையையும் தொங்க விட்டுள்ளனர்.

Comments