மரணித்த ஒரு சில மணிநேரத்தில் வழங்கப்பட்ட கொடுப்பணவு....

மரணித்த ஒரு சில மணிநேரத்தில் வழங்கப்பட்ட கொடுப்பணவு....

சமுர்த்தி திட்டத்தில் ஒரு சமுர்த்தி பயனுகரியின் குடும்பத்தில் யாராவது ஒருவர் இறக்கும் பட்டசத்தில் அவரது மரண நிகழ்வு முடிவடைவதற்குள் அவருக்கான கொடுப்பணவை வழங்குமாறு கூறப்படுகின்றது. அவ்வறிய குடும்பத்திற்கு அப்பணம் மிக முக்கியமான ஒரு விடயமாக கருதப்படுவதால் இதற்கான நடவடிக்கைகளை மேற் கொள்ளுமாறு அறிவுருத்தப்படுகின்றது.
  இன்று மதியம் 12.30 மணியளவில் மயிலம்பாவெளி கிராமத்தில் வசிக்கும் சீனித்தம்பி கைலாயப்பிள்ளை அவர்கள் அமரத்துவம் அடைந்தார் அன்னாரது இல்லத்திற்கு 2.30 மணியளவில் சென்ற சமுர்த்தி உத்தியோகத்தர் பா.ஜெயதாசன் அன்னாரின் மனைவியிடம் அதற்கான கொடுப்பணவை வழங்கியுள்ளார். மரணித்த ஒரு சில மணி நேரத்திற்குள் இக் கொடுப்பணவு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்

Comments