ஆறுமுகத்தான் குடியிருப்பு சமுர்த்தி வலயத்தில் சிறுவர் போட்டி......

ஆறுமுகத்தான் குடியிருப்பு சமுர்த்தி வலயத்தில் சிறுவர்  போட்டி......

சமுர்த்தி திணைக்களத்தால் வருடந்தோறும் நடாத்தப்படும் சிறுவர் போட்டி நிகழ்வுகள் இம்முறையும் சகல சமுர்த்தி வலய மட்டங்களிலும் சிறுவர் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதன் அடிப்படையில் ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஆறுமுகத்தான் குடியிருப்பு சமுர்த்தி வலயத்திலும் சிறுவர் போட்டிகள் வலய முகாமையாளர் திரு.செந்தூர் வாசனின் மேற்பார்வையில் இடம் பெற்றன இவ்வலயத்திற்குட்பட்ட கிராமசேவகர் பிரிவை சேர்ந்த சிறுவர்கள் போட்டியில் கலந்து கொண்டனர். இப்போட்டிகளுக்கு நடுவர்களாக பன்குடாவெளி றோமன் கத்தோலிக்க கலவன் பாடசாலையின் ஆசிரியர் தம்பாப்பிள்ளை கங்காதரன் மற்றும் வாகரை மகாவித்தியாலய  ஆசிரியர் கந்தசாமி சசிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
  இந்நிகழ்வில் ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் திரு.கலாதேவன் ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.தவநீதன் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர் பலரும் கலந்து கொண்டனர்.

















Comments