சமுர்த்தி அறனலு வேலைத்திட்டத்தின் கீழ் வாழ்வாதார உதவிகள்.....

சமுர்த்தி அறனலு வேலைத்திட்டத்தின் கீழ் வாழ்வாதார உதவிகள்.....

2018ம் ஆண்டிற்கான சமுர்த்தி அறனலு வேலைத்திட்டத்தின் கீழ் ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி மகா சங்கம் நான்கு சமுர்த்தி பயனுகரிகளுக்கு வாழ்வாதார உதவிகளை 13.12.2018 அன்று வழங்கி வைத்தது.
ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் சி.ரதிதேவி அவர்களின் தலைமையில் நடைபெற்ற  இந்நிகழ்வில் ஏறாவூர் பற்று பிரதேச செயலக கணக்காளர் ஜே.ஜோச் ஆனந்தராஜா அவர்களும் ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் வே.பிறைசூடி அவர்களும் கலந்து கொண்டு பயனாளிகளுக்கான வாழ்வாதார உதவிகளை வழங்கி வைத்தனர் இரண்டு பயனாளிகளுக்கு விவசாயம் சார்ந்த உதவிகளும் இரண்டு பயனாளிகளுக்கு சிறுகைத்தொழில் சார்ந்த உபகரனங்களும் வழங்கி வைக்கப்பட்டது.



Comments