போதையில் இருந்து விடுபட்ட நாடு விழிப்புனர்வு கருத்தரங்கும் நுன்கடன் பற்றிய விளக்கவுரையும்....

போதையில் இருந்து விடுபட்ட நாடு விழிப்புனர்வு கருத்தரங்கும் நுன்கடன் பற்றிய விளக்கவுரையும்....

மக்களை போதையில் இருந்து விடுவிப்பதற்கும் நுன்கடனில் இருந்து மீள்வதற்குமான் பல செயற்திட்டங்களை இலங்கை அரசாங்கம்  முன்னெடுத்து வருகின்ற போதிலும் சமுர்த்தி திணைக்களமும் இதற்கான பல வேலைத்திட்டங்களை செய்து வருகின்றது. அதற்கமைய ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்தி மன்றமும் பல விழிப்புனர்வு கருத்தரங்குகளை பாடசாலை மட்டம் கிராம மக்கள் மத்தியிலும் செயற்படுத்தி வருகின்றது.
  இதன் ஒரு கட்டமாக ஐயங்கேணி கிராம மக்களுக்கான போதையில் இருந்து விடுபட்ட நாடு மற்றும் நுன்கடன் பற்றிய விளக்கவுரை  விழிப்புனர்வு கருத்தரங்கை ஐயங்கேணி சமுர்த்தி உத்தியோகத்தர் வி.காந்தியசீலனின் அவர்களின் ஏற்பாட்டில்; 2018.08.09 அன்று ஐயங்கேணி பாரதிபுரம்  கிராம அபிவிருத்தி சங்க  மண்டபத்தில் நடைபெற்றது. இக்கருத்தரங்கிற்கு வளவாளராக கல்குடா கல்வி வலய தொழில் வழிகாட்டல் உளவளத்துனை உத்தியோகத்தர் த.விஸ்வஜித்தன் விரிவுரையாளராக செயற்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இக்கருத்தரங்கில் அபிவிருத்தி  உத்தியோகத்தர்களான யோ.பிரதீபன் சமுர்த்தி சங்க தலைவி ஆகியோர் கலந்து கொண்டனர் என ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் சி.தவநீதன் தெரிவித்தார்.
செய்திகள் - சமுர்த்தி ஜெயா
சமுர்த்தி செய்திகளை உடனுக்குடன் பார்வையிட -www.jeyasdo.com
மட்டு மாவட்ட சமுர்த்தி செய்திகளை உடனுக்குடன் அறிவிக்க - Email - jeyasdo@gamil.com










Comments