2018-2020 ஆண்டிற்கான சிப்தொற புலமை பரிசிலுக்கு 58 மாணவர்கள் தெரிவு........

2018-2020 ஆண்டிற்கான சிப்தொற புலமை பரிசிலுக்கு 58 மாணவர்கள் தெரிவு........

ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராமசேவகர் பிரிவுகளில் இருந்து 2018-2020 ஆண்டிற்கான சமுர்த்தி சிப்தொற புலமைபரிசிலுக்கு 58 மாணவர்கள் இம்முறை தெரிவு செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திரு.எஸ்.ஜெயராஜா தெரிவித்துள்ளார்.
தலைமையக முகாமையாளர் திரு.எஸ்.ஜெயராஜா  மேலும் தெரிவிக்கையில் வருடா வருடம் சமுர்த்தி முத்திரை பெறும் பயனாளிகளின் பிள்ளைகள் க.பொ.த(சாதாரண) பரீட்சையில் சித்தியடையும் பட்சத்தில் அவர்களின் பெறுபேறுகளின் அடிப்படையில் க.பொ.த(உயர்தரம்) பரீட்சை தோற்றும் வரைக்கும் மாதாந்தம் 1500 ரூபா விகிதம் வழங்கப்படுகின்ற ஒரு புலமை பரிசில் திட்டமே சிப்தொற புலமை பரிசில் திட்டமாகும் கடந்த வருடம் 48 மாணவர்கள் ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தில் தெரிவு செய்யப்பட்டடதாகவும் 2018ம் ஆண்டில் 160 மாணவர்கள் வருகை தந்த போதிலும் 73 மாணவர்களை மாத்திரமே தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மாணவர்களின் நேர்முக தேர்வில் ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திரு.எஸ்.ஜெயராஜா ஏறாவூர் பற்று பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் செல்வி.லோஜினி மற்றும் குமாரவேலியர் சித்தி வினாயகர் வித்தியாலய அதிபர் திருமதி சுதாகரி மணிவண்ணன் ஆகியோர் மாணவர்களின் தகமையை பரிசீலனை செய்து தரப்படுத்தியது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
செய்திகள் - சமுர்த்தி ஜெயா
சமுர்த்தி செய்திகளை உடனுக்குடன் பார்வையிட -www.jeyasdo.com
மட்டு மாவட்ட சமுர்த்தி செய்திகளை உடனுக்குடன் அறிவிக்க - Email - jeyasdo@gamil.com








Comments