ஏறாவூர் பற்று சமுர்த்தி மகா சங்கத்தால் இசுறு கடனாக பத்து லட்சம் வழங்கப்பட்டது......

ஏறாவூர் பற்று சமுர்த்தி மகா சங்கத்தால் இசுறு கடனாக பத்து லட்சம் வழங்கப்பட்டது......
சமுர்த்தி திட்டத்தில் மிக முக்கிய வேலைத்திட்டமாக கடன் வழங்கும்  செயற்பாடு காணப்படுகின்றது. இதன் அடிப்படையில் ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி மகா சங்கம் முதல் பத்து லட்சம் கடனை ஏறாவூர் - 4 கிராசேவகர் பிரிவை சேர்ந்த திருமதி.செல்வராசா பிரியதர்சினிக்கு இசுறு கடன் திட்டத்தின் கீழ் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எஸ்.ஜெயராஜ் அவர்களால் 06.06.2018 அன்று வழங்கப்பட்டது.
ஏறாவூர் - 4 கிராமத்தை சேர்ந்த திருமதி.செல்வராசா பிரியதர்சினி 2009ம் ஆண்டு சமுர்த்தியில் இணைந்து ஆறுமுகத்தான் குடியிருப்பு சமுர்த்தி வங்கியூடாக முதல் கடனாக பத்தாயிரம்  ரூபாய் பெற்று தன் கனவரின் தச்சுத் தொழிலுக்கு உதவியுள்ளார் பின் ஐம்பதாயிரம் கடன் பெற்று அதன் பின் ஒருலட்சம் ரூபாய் கடன் பெற்று தன் கணவரின் தொழிலுக்கு உதவி வந்தார் அதனை மேலும் விஸ்தரிக்க ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி மகா சங்கத்தின் ஊடாக ஐந்து லட்சம் கடன் பெற்ற இவர் அதனை ஒழுங்கான முறையில் செலுத்தி  தற்போது தன் கணவரின் தச்சுத் தொழிலை பாரிய அளவில் மேற் கொள்ள இசுறு கடன் மூலம் பத்து லட்சம் பெற்று தன் வாழ்வாதாரத்தை உயர்த்திய வண்ணம் உள்ளார். இவர் தான் ஒரு சமுர்த்தி முத்திரை பெறும் பயனுகரி என்றும்  தான் சமுர்த்தி திட்டத்தில் முன்னேற்றம் அடைந்துள்ளதால் தனக்கு இனி இம்முத்திரை வேண்டாம் அதை தான் ஓப்படைக்கவுள்ளதாகவும் அதை ஒரு வறிய குடும்பத்திற்கு வழங்கி அவரையும் முன்னேற்ற வேண்டும் என தெரிவித்ததுடன் தாம் முன்னேற உதவி சமுர்த்தி உத்தியோகத்தர்கள் சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் மகா சங்க எத்தியோகத்தர்களுக்கும் நன்றி கூறியனார்.

செய்திகள் - சமுர்த்தி ஜெயா
சமுர்த்தி செய்திகளை உடனுக்குடன் பார்வையிட -www.jeyasdo.com
மட்டு மாவட்ட சமுர்த்தி செய்திகளை உடனுக்குடன் அறிவிக்க - Email - jeyasdo@gamil.com



Comments