ஏறாவூர்பற்று பிரதேச செயலகத்தில் ஆரம்பித்தது சமுர்த்தி புகைத்தல் கொடி தினம்....

ஏறாவூர்பற்று பிரதேச செயலகத்தில்  ஆரம்பித்தது சமுர்த்தி புகைத்தல் கொடி தினம்....

சமுர்த்தி புகைத்தல் எதிர்ப்பு தினம் மே 31 ஆகிய இன்று ஏறாவூர் பற்று உதவிப்பிரதேச செயலாளர் திருமதி.முகுந்தன் அவர்களுக்கு எதிர்ப்பு தின கொடியை வழங்கியதன் மூலம் ஆரம்பித்து வைக்கப்பட்டது இதில் ஏறாவூர் பற்று பிரதேச செயலக கணக்காளர் திரு.ஜோச் ஆனந்தராஜா ஏறாவூர்பற்று பிரதேச செயலக சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் திருமதி.ரதிதேவி ஏறாவூர்பற்று பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவித்தி உத்தியோகத்தர் திரு.தவநீதன் மற்றும் சமுர்த்தி சங்கத்தலைவர்களும் கலந்து கொண்டனர். இதில் சேகரிக்கப்படும் பணம் கிராமங்களில் வீடுகள் அமைத்துக் கொடுப்பதற்கும் வறிய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள்; வழங்கப்படவுள்ளதாக தெரிவித்ததுடன் இச்சேமிப்பு ஆணி மாதம் 30ம் திகதி வரை நடைபெறவுள்ளதாகவும்  சமூக அபிவித்தி உத்தியோகத்தர் திரு.தவநீதன் தெரிவித்துள்ளார்.

செய்திகள் - சமுர்த்தி ஜெயா
சமுர்த்தி செய்திகளை உடனுக்குடன் பார்வையிட -www.jeyasdo.com
மட்டு மாவட்ட சமுர்த்தி செய்திகளை உடனுக்குடன் அறிவிக்க - Email - jeyasdo@gamil.com








Comments