பங்குனி மாத சமுர்த்தி வீட்டு லோட்டரி வேப்பவெட்டுவான் கிராமத்திற்கே....

பங்குனி மாத சமுர்த்தி வீட்டு லோட்டரி வேப்பவெட்டுவான் கிராமத்திற்கே....

சமுர்த்தி முத்திரை பெறும் பயனுகரிகளுக்கு மாதாமாதம் அவர்களின் முத்திரை பணத்தில் இருந்து வீடு அமைத்து கொள்வதற்காக 50 ரூபாவை அறவீடு செய்து மாதா மாதம் சீட்டிலுப்பு மூலம் தெரிவு செய்யப்பட்டு வீடு இல்லாதவர்களுக்கு வீடு அமைத்துக்கொள்ள இரண்டு லட்சம் வழங்கப்படுகின்றது. இப்பணத்தில்  வீடு இல்லாதவர்கள் வீடு அமைத்துக் கொள்ளலாம் காணி இல்லாதவர்கள் காணி கொள்வணவில் ஈடுபடலாம் குறையாக இருக்கும் வீடுகளை திருத்திக் கொள்வதற்கும் வழங்கப்படுகின்றது இதன் கொடுப்பணவுகள் ஆரம்ப கட்டமாக 80000 ரூபாவும் இரண்டாம் கட்டமாக 80000 ரூபாவும் மூன்றாம் கட்டமாக 30000 ரூபாவும் இறுதி கட்டமாக 10000 ரூபாவும் வழங்கப்படுகின்றது.
  இதன் அடிப்படையில் 2018ம் ஆண்டிற்கான பங்குனி மாத வீட்டு லொட்டரியில் ஏறாவூர் பற்று பிரதேச செயலக வேப்பவெட்டுவான் கிராமசேவகர் பிரிவில் வசிக்கும் திருமதி சின்னத்தம்பி தேவிகாவிற்கு இந்த அதிஸ்டம் கிடைத்துள்ளது. விதவை தாயான இவருடன் மூன்று பிள்ளைகள் வசித்து வருகின்றனர் ஒரு பிள்ளை திருமண வயதை அடைந்துள்ள இச்சந்தர்பத்தில் இவ்வீடு தமக்கு கிடைத்த ஒரு வரம் என தெரிவிக்கும் இவர் புதிதாக ஒரு வீட்டை அமைக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
குறித்த சமுர்த்தி பயனுகரி 15.05.2018 அன்று பிரதேச செயலக சமுர்த்தி அலுவலகத்திற்கு வருகை தந்து தமது ஆவணங்களை ஒப்படைத்து உறுதிப்படுத்தியதாக பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.தவநீதன் தெரிவித்தார்.

பயனுகரியின் முழுப்பெயர் - சின்னத்தம்பி தேவகி
விலாசம் - பாலர்சேனை  வேப்பவெட்டுவான்
வீட்டு லோட்டரி இலக்கம் - 707026
செய்திகள் - சமுர்த்தி ஜெயா.
Email - jeyasdo@gamil.com

Comments